உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பொரலஸ்கமுவ - பெப்பிலிய...
உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, உண்டியல் முறையில் பரிமாற்றுவதற்கென வைத்திருந்த 50,000 யூரோ பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த யூரோ தொகையின் இலங்கை பெறுமதியானது, 18.69 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.