தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு இருப்பு உள்ளதால், வீட்டு எரிவாயு சிலிண்டர்களைப் பெற வரிசையில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ...
தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு இருப்பு உள்ளதால், வீட்டு எரிவாயு சிலிண்டர்களைப் பெற வரிசையில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இறக்கப்பட்ட எரிவாயு தகனச்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ வட்டாரங்களின்படி, அடுத்த எரிவாயு தொகை நாட்டை வந்தடைய குறைந்தது 3 வாரங்கள் ஆகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.