இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலரை அபிவிருத்தி உதவிக்காக வழங்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது....
இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலரை அபிவிருத்தி உதவிக்காக வழங்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மருந்து, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருகின்றது.
இதையடுத்து, இலங்கையில் உள்ள மூன்று மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவுத் திட்டத்திற்கு 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவுஸ்ரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது.