புகையிரத கட்டணத்தை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளொன...
புகையிரத கட்டணத்தை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு புகையிரதமொன்று 100,000 லீற்றருக்கு மேல் எரிபொருளைப் பயன்படுத்துவதால் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதன் பேச்சாளர் பிரதிப் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், புகையிரத திணைக்களத்திடம் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.