வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் தலையீட்டினால் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்களுக்...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் தலையீட்டினால் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் வழங்கவில்லை என ஊடக சந்திப்பை நடத்திய நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தியுளளார்.
இதன் பிரகாரம் வடமாகாண ஆளுநர்
இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிரதான முகாமையாளரரை தொடர்புகொண்டு போக்குவரத்து சேவை அத்தியவசிய தேவையாக கருதப்படுகின்ற நிலையில் தடையின்றி மேற்கொள்வதற்கு சாரதி காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கான எரிபொருளை வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடுமாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வட பிராந்திய பிரதி முகாமையாளர் இருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளருக்குமிடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முல்லைத்தீவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு முள்ளியவளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படும் அதேவேளை மன்னார் சாலையை சேர்ந்தவர்களுக்கும் மன்னாரில் எரிபொருள் வழங்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை எரிபொருள் வழங்குவற்கான ஏற்பாடுகள் வவுனியா மாவட்ட அரசு அதிபரின் நாள் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.