முல்லைத்தீவு - மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து காவல்துறையில் முறைப்...
முல்லைத்தீவு - மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் பல்நோக்கு கூட்டுறவு சங்க மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என்ற பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று அதிகாலை முதல் 2 கிலோமீற்றர்களுக்கு அதிகமான நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இதனை, சக ஊடகவியலாளருடன் அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்ததாக கூறப்படும் நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளாகினார்.
இதன்போது, அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்து தாக்குதலை தடுத்திருந்தனர்.
பின்னர் காவல்துறையினர் அந்நபரை எச்சரித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனினால் மல்லாவி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.