கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு பதற்றமான ...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அங்கிருந்து சுமார் 600 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலைமையை கட்டுப்படுத்தவும் தப்பியோடிய கைதிகளை கைது செய்யவும் இராணுவம் மற்றும் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.