யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பொன்னம்பலம் அன்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இன்றைய தினம் சீரான ம...
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பொன்னம்பலம் அன்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இன்றைய தினம் சீரான முறையில் இடம்பெற்றது.
இன்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் QR Cord அடிப்படையில் 6,7,8,9 பின்னிலகங்களைக் கொண்ட வாகனங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாக பொன்னம்பலம் அன்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் செந்தில் செல்வம் றுபிந்தன் தெரிவித்தார்.
இதன் போது 6600 லீற்றர் பெற்றோல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த முகாமையாளர் செந்தில் செல்வம் றுபிந்தன், பெற்றோல் விநியோகத்தைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் 300 வாகனங்களுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்றது.
விவசாயிகளின் நன்மை கருதி இதற்கு மேலதிகமாக உழவு இயந்திரங்களுக்கும் டீசல் வழங்கப்பட்டது- என்றார்.