போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கங்கராமை விஹார...
போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கங்கராமை விஹாரையில் நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகவியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போராட்டம் என கூறி, ஜனநாயக விரோதமாக வீடுகளுக்கு தீ வைத்தல், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றுதல் போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், எதிர்காலத்திற்காக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு, அதற்கான மேடையை தான் அமைத்துக்கொடுக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.