அனுரகுமார திசாநாயக்க விடுத்துள்ள விசேட கோரிக்கை!

அனுரகுமார திசாநாயக்க விடுத்துள்ள விசேட கோரிக்கை!

யார் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டாலும் திட்டவட்டமான காலப்பகுதிக்கான இடைக்கால அரசாங்கமொன்றே நிறுவப்படவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும...

யார் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டாலும் திட்டவட்டமான காலப்பகுதிக்கான இடைக்கால அரசாங்கமொன்றே நிறுவப்படவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஊடக சந்திப்பொன்றிலேய அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.


 
மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஸவை முதன்மையாகக்கொண்ட ராஜபக்ஸ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பாரிய ஊக்கமுள்ள மக்கள் எழுச்சி தோன்றியது. அடையாளரீதியாக நிலவியது ராஜபக்ஸ ஆட்சிக்க எதிரானதாக அமைந்தபோதிலும் அதன் சாரம் பொருளாதமார, அரசியல், சமூக மாற்றமொன்றின் தேவையாகும். இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் கலாசாரத்தையும் பொருளாதார முறையையம் மாற்றியமைக்கவேண்டிய தேவையை ஈடேற்றுவதற்காக ஜனாதிபதி பதவி வெற்றிடமாகிய நாளில் இருந்து நாங்கள் இயங்கி வந்தோம். அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்கால அரசியல் அதிகாரக் கருத்திட்டமற்ற இருவராக அமையவேண்டுமெனவும் சர்வகட்சி அரசாங்கமொன்று திட்டவட்டமான காலப்பகுதிக்காக நிறுவப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினோம். அதன் பின்னர் குறுகிய காலத்தில் பொதுத் தேர்தலை நடாத்தி மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற உறுதியான அரசாங்கமொன்றை நிறுவி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். எதிர்கால அதிகாரக் கருத்திட்டமொன்று இல்லாத இருவர் ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமிக்கப்படவேண்டுமென அதனாலேயே வலியுறுத்தினோம். ஓர் எண்ணக்கரு என்றவகையில் எமது அந்த முன்மொழிவினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இறுதியில் அதிகாரப் பாசறைகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற தரவுகள் உருவாகின. அந்த சரியான வழிமுறை இன்றளவில் ஒதுக்கிவிடப்பட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்ய வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.



 
ராஜபக்ஸ பாசறையை பாதுகாக்கின்ற அதனை பிரதிநிதித்துவம் செய்கின்ற ரணில் விக்கிரமசிங்கவும் அந்த பாசறையில் இருந்து விலகிய கூட்டத்தை தன்னைச் சுற்றி தொகுத்துக்கொண்ட டலஸ் அலகப்பெருமவும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளார்கள். நாங்கள் நல்லெண்ணத்துடன் முன்வைத்த முன்மொழிவினை இந்த பாராளுமன்றத்தில் யதார்த்தமாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. தற்போதுள்ள நிலைமையின்படி ஜனாதிபதியாக நியமிக்கப்படுகின்ற எவராயினும் எமது நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகவும் சிரமமான தருணம் பற்றிக் கவனம் செலுத்தவேண்டும். எமது முன்மொழிவு பிரதி அல்லது இராஜாங்க அமைச்சர் பதவிகளின்றி அமைச்சர்கள் பத்து பேரைக்கொண்ட அமைச்சரவையை நிறுவுவதாகும். மட்டுப்படுத்தப்பட்ட பணிகளுக்காக கட்டியெழுப்பப்படுகின்ற இடைக்கால அரசாங்கத்திற்கு அந்த அமைச்சரவை போதுமானது. பாராளுமன்றத்திற்க இன்னும் மூன்று வருட பதவிக்காலம் இருந்தாலும் அந்த முழுமையான காலப்பகுதி பூராவிலும் அதனை முன்நோக்கித் தள்ளிச்செல்ல எவருக்குமே உரிமை கிடையாது. அதனால் தொடங்குகின்ற திகதியையும் முடிவடைகின்ற திகதியையும் திட்டவட்டமாக நாட்டக்கு வெளிப்படுத்துகின்ற இடைக்கால அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும். ரனில் விக்கிரமசிங்கவோ டலஸ் அலகப்பெருமவோஇடைக்கால அரசாங்கமொன்றை நிறுவுதல் பற்றி இன்னமும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை. அவர்கள் அதனை வெளிப்படுத்தினால் மூன்று வருடங்கள் பாராளுமன்றத்தில் இருப்பதற்கான எதிர்பார்ப்புடன் இருக்கின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் நான் வலியுறுத்துவது குறுங்கால, இடைக்கால அரசாங்கம் நிறுவப்படவேண்டுமென்தாகும். மக்களின் அபிப்பிராயத்திற்கும் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி நிலவுகின்றது.


 
இடைக்கால அரசாங்கத்தின் காலப்பகுதிக்குள் சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அல்லது கூட்டுத்தாபனங்களின், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைக்காக உரிய அடிப்படை சம்பளத்தைவிட எந்தவிதமான அவாநிறைவும் சிறப்புரிமையும் வழங்கப்படலாகாது. இந்த கொள்கைக்குப் பதிலாக ரனில் விக்கிரமசிங்க ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு செலுத்தவும் தயாராகி உள்ளார். அடுத்ததாக பாராளுமன்றத்தில் மண்டைகளால் மாத்திரம் நிரம்பிய உள்ளடக்கமாக அமையாமல் மக்களின் போராட்டத்தை தொடங்கிய தொழிற்சங்க இயக்கம், பொதுமக்கள் மற்றும் இறுதியில் கோல்பேஸ் மைதானத்தில் அடையாளரீதியாக குவிந்துள்ள போராட்டக்காரர்களுக்கு மேற்பதார்வைப் பொறியமைப்பில் இடையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும். எந்த சனாதிபதியை நியமித்துக்கொண்டாலும் அது அவசியமாகும். அதைப்போலவே கட்டியெழுப்பப்படுகின்ற அரசாங்கம் மிகவும் குறுகிய காலத்திற்குள் எண்ணெய், கேஸ், பால் மா போன்ற அத்தியாவசிய பண்டங்களை இடையறாமல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைப்போலவே தொழில்களை இழந்தமையாலும் பாரியளவில் பண்டங்களின் விலைகள் அதிகரித்தமையால் தமது உணவுவேளையை நிவர்த்திசெய்துகொள்ள முடியாமல் இருக்கின்ற மக்கள் சமுதாயத்திற்கு தமது வாழ்க்கையைப் பேணிவருவதற்கான நியாயமான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.

சீரழிந்துள்ள கைத்தொழில்கள், சுற்றுலாத் தொழிற்றுறை, பாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள், பொதுப்போக்குவரத்து மீள்நிறுவப்படவேண்டும். மக்களின் போராட்டத்திற்குள் இந்த தேவைகள் பொதிந்திருந்தன. அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் இந்த தேவைகளை ஈடேற்றவேண்டும். ஆனால் இப்போதும மொட்டுக்கட்சியின் தலைவர் வழிமொழிந்த ரனில் விக்கிரமசிங்கவோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரால் முன்மொழியப்பட்ட மொட்டுக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெருமவோ இந்த எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவார்களென்ற எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது. இறுதியில் மொட்டுக்கட்சியால் ஐதேக தலைவர் முன்வைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியால் மொட்டுக்கட்சியின் பொருளாளர் முன்வைத்த திரிபுநிலை காணப்படுகின்றது. அவர்கள் மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவரமாட்டார்கள். குறுங்கால அரசாங்கத்தில் சனநாயகத்தைப் பலப்படுத்துதல், அடிப்படை மனித உரிமைகளைப் உறுதிப்படுத்துதலை உள்ளிட்ட அடிப்படைத் திருத்தங்கள் ஆறுமாத காலப்பகுதிக்குள் அங்கிகரிக்கப்படல் வேண்டும். கோல்பேஸ் மைதானத்திலும் நாடு பூராவிலும் குரலெழுபபிய மோசடி, ஊழல்களைப் புரிந்தஅனைவருக்கும் எதிராக நியாயமான வழக்கு விசாரணை நடாத்தி அவர்கள் கையகப்படுத்திய செல்வத்தை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளவேண்டும். இது சம்பந்தமாக எதுவுமே ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது டலஸ் அலகப்பெருமவோ நாட்டுக்கு எந்தவிதமான கூற்றினையும் வெளியிடவில்லை. மோசடிப் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்குவதாக ரனில் விக்கிரமசிங்க கூறினால் பிரசன்ன ரணதுங்க போன்றவர்களின் வாக்குகள் கிடைக்கமாட்டாது. டலஸ் அழகப்பெரும அதனைக்கூறினால் சஜித்தின்’ வாக்கு கிடைக்கமாட்டாது.


 
மோசடியால் ஊழல் மூலமாக கொள்ளையடித்த மக்கள் செல்வத்தை மீண்டும் கையகப்படுத்திக் கொள்கின்ற செயற்பாட்டினை சீக்கிரமாக ஆரம்பித்து நிறைவுசெய்யவேண்டும். ஏற்கெனவே அதற்காக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விசாரணைகளையும் வழக்கு விசாரணைகளையும் துரிதப்படுத்தி இன்றளவிலும் பரபரப்பினை ஏற்படுத்த ஏதுவாக அமைந்துள்ள வாபஸ் பெறப்பட்டுள்ளவழக்குகள் சம்பந்தமாக மீண்டும் வழக்குத் தொடரவேண்டும். சட்டத்துறை தலைமை அதிபதி , இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கையெழுத்து சம்பந்தமான தொழில்நுட்ப விடயங்கள் போன்ற காரணங்களாலேயே வாபஸ் பெறப்பட்டிருந்தன. அரசியல் அதிகாரத்தின் இடையீட்டினால் மூடிமறைக்கப்பட்டுள்ள விசாரணைகளை துரிதப்படுத்தவேண்டும். எயார் லங்கா கொடுக்கல் வாங்கல், மத்திய வங்கியின் பணத்தை ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகளுக்கு வழங்குதல், தூதுவர் அலுகலக கொள்வனவின்போது இலஞ்சம் பெறல் போன்ற விடயங்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வெளிவந்துள்ளது. பன்டோறா ஆவணங்கள் மூலமாக வெளிவந்துள்ளன. சர்வதேசத்தின் மத்தியில்கூட உறுதியாகியுள்ள நிதிசார் மோசடிகள் சம்பந்தமாக இந்த நாட்டில் செயலாற்ற நாங்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும். இலஞ்சம், ஊழலை குறைப்பதற்காக புதிய சட்டங்களை அறிமுகஞ்செய்யவும் நிலவுகின்ற சட்டங்களை பலப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எமது நாட்டிலிருந்து கடத்திச்சென்று சர்வதேசரீதியாக ஒளித்துவைத்துள்ள பணத்தை மீண்டும் கையகப்படுத்திக்கொள்ள சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வோம். இந்த விடயங்களை ஈடேற்றிக்கொள்ள எமது நாட்டு மக்களின் விருப்பத்துடன் நியாயமான பிரதிபலிப்பினைக்கொண்ட பாராளுமன்றமொன்று தெரிவுசெய்யப்படவேண்டும். மிகவும் சீக்கிரமாக அதற்கான இடவசதியைப் பெற்றுக்கொள்ன மக்களுக்கு புனிதமான உரிமை இருக்கின்றது.


 
இந்த அடிப்படை விடயங்களை ஈடேற்றிக் கொள்கின்ற அறுமாதகால உச்சவரம்பிற்கு கட்டுப்பட்ட இடைக்கால ஆட்சியொன்றை நிறுவுவது எமது முன்மொழிவாகும். நாளை வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு முன்னர் இந்த வாக்குறுதியை வழங்குமாறு ரனில் விக்கிரமசிங்கவிற்கும் டலஸ் அலகப்பெருமவிற்கும் சவால் விடுக்கிறோம். இந்த இருவரும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் அல்லது இடைக்கால ஆட்சி பற்றி எவருமே கூறுவதில்லை. தமது அதிகாரத்திற்காக மக்களின் உண்மையாக அபிலாசைகளை கீழடக்குகின்ற கும்பல் என்பதே அதன் மூலமாக தெளிவாகின்றது. அதனால் மக்களின் உண்மையான அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்து நாங்கள் சனாதிபதி பதவிக்காக போட்டியிடுகிறோம். நாங்கள் சிறிய குழுவாக இருப்பினும் இத்தருணத்தில் கொழுந்துவிட்டெரிகின்ற வேதனைகளையும் அபிலாசைகளையும் நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கிறோம். நாங்கள் மீண்டும் மீண்டும் மக்களின் இந்த அபிலாசைகளுக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் போராடிக்கொண்டு முன்நோக்கி நகர்வோம் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அனுரகுமார திசாநாயக்க விடுத்துள்ள விசேட கோரிக்கை!
அனுரகுமார திசாநாயக்க விடுத்துள்ள விசேட கோரிக்கை!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidUBESIBYz4s2amzDMfpUUmpGLQkmrUdaZ8uFQvEzUxwhpWwzRIkfF5aSSla86NBcoxGIRmk4WBCq-anJjwjHuA5LFNXI66c_HGniKdPT5PQmvX0E6gJn6-CGcJIGv2QUsboR8K9q5eqnYiMDDtCsG7Ul7TLIxBikcWmC0doI8aOCvoPQQCEFTWr_p/w640-h365/20220708_221025-696x397.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidUBESIBYz4s2amzDMfpUUmpGLQkmrUdaZ8uFQvEzUxwhpWwzRIkfF5aSSla86NBcoxGIRmk4WBCq-anJjwjHuA5LFNXI66c_HGniKdPT5PQmvX0E6gJn6-CGcJIGv2QUsboR8K9q5eqnYiMDDtCsG7Ul7TLIxBikcWmC0doI8aOCvoPQQCEFTWr_p/s72-w640-c-h365/20220708_221025-696x397.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/07/blog-post_55.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/07/blog-post_55.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content