நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலுக்கு செல்ல அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப...
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலுக்கு செல்ல அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம்வரையில் தேர்தல் ஒன்றை நடத்த முடியாது.
நாடாளுமன்றத்தை கலைத்து புதிய மக்கள் ஆணையை பெற வேண்டும் என்பது தமது கருத்தாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் அரசியலமைப்பின் படி, அடுத்துவரும் ஜனாதிபதி ஒருவருக்கு 4 ஆண்டுகாலத்திற்குள் தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்பதுடன் முழுமையான பதவி காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பொது தேரதலுக்கு செல்ல முடியும்.
நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடாளுமன்றில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் அதனை கலைப்பதற்கு இணக்கம் பெறப்பட்டு, ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் அதனை தீர்க்க வேண்டும்.
போராட்ட களத்தில் உள்ளவர்கள் என்ன கூறினாலும் இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
தற்போது செலவுகள் இரட்டிப்பாகியுள்ளன.
எரிபொருள் உள்ளிட்ட அனைத்திற்கும் 12 பில்லியனை மதிப்பீடு செய்ய முடியும்
ஆனால் அதனை மீண்டும் 6 பில்லியனுக்கு குறைக்க முடியும்.
ஜனநாயகத்திற்காக நடத்தப்படும் பொது தேர்தலுக்கு நிதியுதவிகள் கிடைக்கும்.
ஏனைய செலவுகளை குறைத்தால் தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.