யாழ் சரவணை மேற்கு வேலணையில் “பூமணி வாசா” இல்லத்தில் இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் முன்னணி சமூக சேவை அமைப்பாக இயங்கி வரும் பூமணி அம்மா அற...
யாழ் சரவணை மேற்கு வேலணையில் “பூமணி வாசா” இல்லத்தில் இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் முன்னணி சமூக சேவை அமைப்பாக இயங்கி வரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் கிளைக் காரியாலயம் ஒன்று 13/07/2022 அன்று காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும்,சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR) யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் பணிப்பாளருமாகிய திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் தீவக பகுதியில் கல்வி,சுகாதாரம்,குடிநீர்,வாழ்வாதாரம் சுயதொழில் திட்டம்,விளையாட்டுத்துறை போன்றவற்றை மேம்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக மக்கள் தொடர்பு பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளருமான N.விந்தன் கனகரட்ணம் தலைமையில் நடைபெற்ற
இத்திறப்பு விழா நிகழ்வில்.பிரதம விருந்தினர்களாக அமெரிக்காவை சேர்ந்த ITR ராஜா அவர்களும்,ஜேர்மனியைச் சேர்ந்த திரு திருமதி பாஸ்கரன் ஜெயந்தி அவர்களும்,சிறப்பு விருந்தினராக ஜேர்மனியை சேர்ந்த ஜேர்மனி தமிழ் வானொலி பணிப்பாளர் நயினை சூரி அவர்களும் கௌரவ விருந்தினராக நாரந்தனை பங்குத் தந்தை அருட்பணி S.அஜந்தன் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளால் விருந்தினர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் மௌன வணக்கத்தை தொடர்ந்து விருந்தினர்கள் அலுவலகப் பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்து வைபக ரீதியாக அலுவலகத்தையும் நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
அத்தோடு பூமணி அம்மாவின் திருவுருவப் படம் திரை நீக்கம் செய்யப்பட்டு மலர் தூவி அஞ்சலியுடன் மரியாதை செலுத்தப்பட்டதுடன் திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் பிறந்த தினமான 13/07/2022 அன்று அவரின் நிதிப் பங்களிப்பில் 66 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் அப்பகுதியில் உள்ள வறிய நிலை முதியோருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்த உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த திட்டங்களுக்கான சமையல் பாத்திரங்களை கனடா ரொறண்டோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் பூமணி அம்மா
அறக்கட்டளையின் அறப்பணிகளில் முக்கிய பங்கை தொடர்ச்சியாக ஆற்றி வரும் மோகனதாஸ் மேகன் அவர்கள் வழங்கி வைத்தார்.அத்தோடு சரவணைப் பகுதியில் அறப்பணிகளை மேற்கொள்ள நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த ITR ராஜா அவர்கள் ரூபா இருபத்தி ஐந்தாயிரத்தை அறக்கட்டளையிடம் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.குறித்த நிகழ்வில் அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ,பொருளாளர் S.கீர்த்தனா,நிர்வாக சபை உறுப்பினர் S.கார்த்திகா சமூக சேவையாளர்களான T.அன்ரனி பெர்னாண்டோ பாஸ்கரன்,வேலன்
தெய்வேந்திரன்,அருள்,ஆசிரியர்களான அகுஸ்ரின் யஸ்ரின்,தெய்வேந்திரன் வசந்தன்,சமூர்த்தி அலுவலக பணியாளர் ஜோண் மேரி ஜனா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.20