சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிலையத்தில் மக்கள் இரவு பகலாக எரிபொருளுக்கு காத்திருக்கும் நிலையில் வாகனங்களில் வந்த சீருடையினர் கொள்கலன்களில் எ...
சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிலையத்தில் மக்கள் இரவு பகலாக எரிபொருளுக்கு காத்திருக்கும் நிலையில் வாகனங்களில் வந்த சீருடையினர் கொள்கலன்களில் எரிபொருளை எடுத்துச் செல்லும் காட்சி இரவில் அங்கு நின்றவர் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவதாக தற்போது நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள மூன்று ஐஓசி எரிபொருள் நிலையங்களுக்கு ஒழுங்கு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிலையத்துக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளை மக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் தொடர்ச்சியாக பகிர்ந்த ளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் பதிவாகியுள்ளது இராணுவ வாகனங்களில் வருகை தந்த சீருடையினர் மஞ்சள் நிற கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி வாகனங்களில் ஏற்றும் காட்சி பதிவாகியது.
ராணுவத்துக்கு தேவையான எரிபொருளை பலாலியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏன் கொள்கலன்களில் குறித்த எரிபொருள் நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றார்கள் என வரிசையில் நின்றவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற வருபவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக இராணுவத்தை கடமையில் அமர்த்திய நிலையில் இவ்வாறு இராணுவமே கொள்கலங்களில் எரிபொருளை எடுத்துச் செல்வது பார்ப்போரை முகம் சுளிக்க வைப்பதாக தெரிவித்தனர்