திருமணம் செய்து விட்டு தரகு பணம் செலுத்தாது ஏமாற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்... மணப்பெண் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு நீதிமன்றத்தை நாட முட...
திருமணம் செய்து விட்டு தரகு பணம் செலுத்தாது ஏமாற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்...
மணப்பெண் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு நீதிமன்றத்தை நாட முடிவு!
பொதுவாக வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே எமது சமூகத்தில் ஒரு கிராக்கி உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் வெளிநாடு செல்ல ஆசைப்படுகின்றனர்.
பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்தேனும் வெளிநாடுகளுக்கு அனுப்பவே விரும்புகின்றனர். கொரோணா பெருந்தொற்று காரணமாக கடந்த மூன்று வருடமாக தாய் நாடு திரும்ப முடியாது இருந்தவர்கள் இப்போது தமது பிள்ளைகளை தமது சொந்த ஊருக்கு அழைத்து வந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.
இணையம் மூலமான திருமண சேவைகள் அதிகரித்து உள்ள நிலையில் பெருமளவு உள்நாட்டு வெளிநாட்டு திருமணங்கள் இப்போது இடம்பெறுகிறது. இவ்வாறு திருமணம் செய்யும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் திருமண தரகர் கூலியை செலுத்துவது இல்லை என தரகர்கள் குறை கூறுகின்றனர்.
இந்நிலையில் பிரபல திருமண சேவை நிறுவனம் ஒன்று நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிய கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் முகாமையாளர் உடன் பேசியபோது வெளிநாடுகளில் இருந்து வந்து பெருமளவு பணத்தை செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்வோர் தமக்கான சிறிய தொகையை செலுத்துவதில்லை என்றும் தாம் தரகர் பணத்தை கேட்கும் போது வாட்ஸப்பில் தடை அதாவது பிளாக் செய்வதாகவும் கூறினார். மேலும் தரகர் பணம் கிடைக்கும் வரை மணப்பெண் வெளிநாடு செல்வதை இடை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.