நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவிருந்த QR முறையின் பிரகாரம் எரிபொருள் விநியோகத் திட்டம் இன்று (25) நடைமுறைப்படுத்தப்படாது என மின்சாரம் மற்று...
நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவிருந்த QR முறையின் பிரகாரம் எரிபொருள் விநியோகத் திட்டம் இன்று (25) நடைமுறைப்படுத்தப்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதால், இன்று முன்னோடித் திட்டமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.