எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதல் வாரத்தின் ஐந்து நாட்களிலும் அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் செயற்பாடுகளை நடத்து...
எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதல் வாரத்தின் ஐந்து நாட்களிலும் அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் செயற்பாடுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று சனிக்கிழமை (13) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள், இணைப்பாடவிதான மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளையும் குறைக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமம் உள்ள பிரதேசங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொருத்தமான போக்குவரத்து திட்டத்தை தயாரிக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.