யாழ்.வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மூத்த பல்துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை (17) இலங்கை வேந்தன் ...
யாழ்.வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மூத்த பல்துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை (17) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் அருளப்பு வென்சிலாஸ் அனுரா ஏற்பாட்டில் முன்னாள் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் மறைந்த மூத்த பல்துறையைச் சேர்ந்தவர்களின் பெயரில் விருதுகள் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கல்வியாளர்கள், மூத்த கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.