முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் தாயகம் திரும்புவதற்கு போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஜனாதிபத...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் தாயகம் திரும்புவதற்கு போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வூப் பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க மற்றும் அதன் ஆணையாளர் டொக்டர் நிமல் கருணாசிறி அகியோரின் கையெழுத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சரியான உறுதிமொழி இல்லாமையினால், முன்னாள் ஜனாதிபதி தாயகம் திரும்புவதற்கு முடியாத நிலைமை காணபபடுவதாக தமக்கு முறைபாடொன்று கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கு மாத்திரமன்றி, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.