நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கும், புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் தமிழ் உற...
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கும், புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றதாக நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, முக்கிய இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிடம், நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனைகள் எதுவும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி நிலைநாட்;டப்பட வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு பிரிவின் அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விடயங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, தமிழ் சிங்கள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய முடியும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஒற்றுமை, தமிழர்களுக்கான சமவுரிமை, அரசியல், சமாதானம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கூறியதாக நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு குறிப்பிடுகின்றது.