கொழும்பு சென் பீற்றஸ் கல்லூரி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அழைக்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளுக்கிடையே புனிதர்கள் போர் கிண்ணத்திற்கான காற்பந்...
கொழும்பு சென் பீற்றஸ் கல்லூரி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அழைக்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளுக்கிடையே புனிதர்கள் போர் கிண்ணத்திற்கான காற்பந்தாட்ட போட்டி கடந்த சனிக்கிழமை சென் பீற்றஸ் கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது இப் போட்டியில் தேசியரீதியில் 16 பாடசாலை அணிகள் பங்குபற்றின.
சென் பற்றிக்ஸ் கல்லூரி தனது முதலாவது போட்டியில் மருதானை சென் ஜோசப் கல்லூரியை 1 : 0 என்ற கோல்கணக்கிலும், கால இறுதி ஆட்டத்தில் மவுண்லாவணியா சென் தோமஸ் கல்லூரியை சமனிலை உதை மூலம் 3 : 2 என்ற கோல் கணக்கிலும் அரை இறுதி ஆட்டத்தில் கண்டி திருத்துவக் கல்லூரியை 1 : 0 என்ற கோல் கணக்கிலும் விறுவிறுப்பாக இடம் பெற்றது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற வடமாகாணத்திலிருந்து பங்குபற்றிய கல்லூரிகளும் இறுதிபோட்டியில் இளவாளை னெ. கென்றிஸ் கல்லூரியுடன் மோதியது. குறிக்கப்பட்ட நேரத்தினுள் இரு அணிகளும் கோல் எதுவும் பெறாத நிலையில் ஆட்டம் சமனிலையில் முடிய வழங்கப்பட்ட சமனிலை உதை ஆட்டத்திலும் 7 : 7 என இரு அணிகளும் சமனிலையை அடைய போட்டி நிபந்தனையின் படி நாணயச் சுழற்சியின் மூலம் சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்று அகில இலங்கை புனிதர்கள் போர் காற்பந்தாட்டக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டிகளின் ஆட்டநாயகனாக சென் பற்றிக்ஸ் கல்லூரி அணித் தலைவர் ம. மேரிசன் தெரிவு செய்யப்பட்டார்.