தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெறவுள்ளநில...
தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெறவுள்ளநிலையில், யாழ் மாநகர சபை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில், இன்று(26) காலை-8.30 மணி முதல் காலை 11 மணி வரை நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் நல்லூர் பகுதியில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் அந்த பகுதி மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த வீதியை பயன்படுத்துவோர் இயலுமானவரை மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தியாகதீபம் திலீபனின் ஊர்திகள் பல இடங்களிலும் இருந்தும் வரும் என்பதால் ஊர்திகள் தரித்து நிற்பதற்கான பிரத்தியேக இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மக்கள் அதனை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.