தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதி...
தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று(17) சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் சமயத் தலைவர்கள் , அனைத்துக் கட்சித் தலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களை சார்ந்தோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.