யாழ் நகரப்பகுதியில் இருந்து கொழும்பிற்கு பேருந்து மூலம் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக விநியோகம் செய்ய முற்பட்ட நபரே மாவட்ட குற்றத்தடுப்புப...
யாழ் நகரப்பகுதியில் இருந்து கொழும்பிற்கு பேருந்து மூலம் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக விநியோகம் செய்ய முற்பட்ட நபரே மாவட்ட குற்றத்தடுப்புபொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
கஞ்சா போதைப்பொருளை சந்தேகம் ஏற்படா வண்ணம் பொதி செய்து யாழில் இருந்து கொழும்பு செல்லும் அரச போருந்து மூலம் கொழும்பிற்கு விற்பனைக்காக குறித்த நபர் விநியோகத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் யாழ் பேருந்து நிலையத்தில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரின் உடமையில் இருந்து சுமார் 8 ½ கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் நயினா தீவை சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் உபபொலிஸ்பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் யாழ் நீதவான் நீதிமன்றில் முறபடுத்தப்பட்டதுடன் நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார