விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி, சிறைச்சாலை விசாரணை குழு முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி, சிறைச்சாலை விசாரணை குழு முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் தலைமையிலான சிறைச்சாலை விசாரணை குழு முன்னிலையில் நேற்றைய தினம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
திலினி பியமாலியின் சிறைக்கூடத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களில் ஒன்றான கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளுக்காகவே அவர், விசாரணை குழு முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
தான் இந்த குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என திலினி பியமாலி விசாரணை குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில், திலினி பியமாலி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.