யாழ் உதைபந்தாட்ட லீக்குடன் டான் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து நடாத்தும் புதிய விடியல் உதைபந்தாட்ட சுற்று போட்டி நாளை(29) ஆரம்பமாக உள்ளது. அர...
யாழ் உதைபந்தாட்ட லீக்குடன் டான் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து நடாத்தும் புதிய விடியல் உதைபந்தாட்ட சுற்று போட்டி நாளை(29) ஆரம்பமாக உள்ளது.
அரியாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக் தலைவர் இமானுவல் ஆனோல்ட் இதனை தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உதைப்பந்தாட்டத்தை முன்னோக்கி செயற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் டான் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் கடந்த எட்டு வருடங்களாக புதிய விடியல் உதை பந்தாட்ட சுற்று போட்டி நடாத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டுக்கான சுற்றுப்போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது. டிசம்பர் மாதம் நான்காம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
இம்முறை சுற்றுப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றவுள்ளதோடு இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணிக்கு ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசிலும் இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு ஐந்து லட்சம் ரூபா பணப் பரிசிலும் மற்றும் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் சிறந்த கோல் காப்பாளர் ஆகியோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது- என்றார்.