யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் தனி முடிவின் கீழ் கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிறுவிய நினைவுக் கல்லை உடன் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை மு...
யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் தனி முடிவின் கீழ் கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிறுவிய நினைவுக் கல்லை உடன் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த ஈ.பீ.டி.பி உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கோரிக்கையினை இன்று கையளித்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தொடரும் மூடு மந்திர நிர்வாகத்தில் சபைக்குத் தெரியாது ஒரு உறுப்பினரின் பெயரை மட்டும் கல்வியங்காடு சந்தையின் கல்வெட்டில் இணைத்தமை தொடர்பில் ஈ.பீ்.டி.பி தமது கடும் அதிருப்தியை வெளியிடப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கல்வியங்காடு சந்தை நேற்று முன்தினம் திறப்பு விழா இடம்பெற்றது. இதன் போது சபையின் அனுமதி இல்லாது முதல்வர் தனது கட்சியை சேர்ந்த வ.பார்த்தீபன் பெயரை இணைத்து நினைவுக் கல் நாட்டப்பட்டியுள்ளார்.
இதனைக் கண்டித்து இதற்கு உடன் தீர்வாக கல்லை உடன் அகற்றக்கோரி ஈ.பீ.டி.பியின் மாநகர சபை உறுப்பினர்கள் கடந்த வெள்ளி மாலை அவசர கூட்டம் ஒன்றை நடாத்தி தீர்மானித்துள்ளனர். இதன் முடிவிலே உடன் கல்லை அகற்ற வேண்டும் என்ற முடிவை எட்டியுள்ளனர். இதனை எழுத்தில் எழுதி ஒப்பமிடப்பட்ட கடிதமே இன்று கையளிக்கப்பட்டது.
ஈ.பீ.டி.பி சார்பில் சபையில் அங்கம் வகிக்கும் 10 பேரும் சுதந்திரக் கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் இருவரில் ஒருவருமாக மொத்தம் 11பேர் ஒப்பமிட்ட கடிதம் மாநகர முதல்வர்
வி.மணிவண்ணனிடம் சமர்ப்பிக்க சபையின் செயலாளரிடம் உறுப்பினர் இரா.செல்வவடிவேல் கையளித்தார்.