யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான வரலாறு ரணில...
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான வரலாறு ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இதனடிப்படையிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் நாமல் ராஜபக்ச கூறுகின்றார்.
பொலன்னறுவை பகுதியில் நேற்று (ஒக்.15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பில் முன்னர் பேசிக்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது அவ்வாறு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னர் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவு வழங்கினாலும் தற்போது அவ்வாறு கிடையாது என அவர் குறிப்பிட்டார்.
அதனாலேயே தூதரகங்கள் கூறுவதனை செவிமடுக்காது, காலிமுகத்திடல் போராட்டத்தை வலுவிழக்க செய்ததாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தற்போது நினைவுக்கு வந்தாலும், அது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு நினைவுக்கு வரவில்லை என அவர் தெரிவித்தார்.