நீண்ட காலமாக சிறையிலுள்ள முப்பத்துமூன்று தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர...
நீண்ட காலமாக சிறையிலுள்ள முப்பத்துமூன்று தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட ஒருவரைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவருடைய வழக்கினுடைய பிரதி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு கிடைக்கப்படாத காரணத்தால் அவருடைய விடுதலை தாமதமாகிக் கொண்டிருக்கின்றது. அவரும் விரைவில் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. அதனை எதிர்பாத்து காத்திருக்கின்றோம்.