சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக...
சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – சிலாபம் வீதியின் ஆனைவிழுந்தான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிள் மோதியதில் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான கதிரேசன் பாலமுருகன் என்ற யாசகர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து குறித்த நபர் ஆனைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது பையை சோதனை செய்த போது ரூ.135,000 பணம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள 05 வங்கி கணக்கு புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பல வருடங்களாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்தமை தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.