ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கொழும்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (நவ.02) உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.