இந்தியா – புது டில்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக நீங்கும் என தேசிய கட்டிட ஆராய்...
இந்தியா – புது டில்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக நீங்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடும் போது காற்றின் மாசுபாட்டின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இலங்கையில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டது. இதேவேளை சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
மாண்டூஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்ஜய ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளர். இதனால் நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.