தலைவர் ஆரம்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்றுடன் முறிந்த நிலையில் இனி சுயலாவ அரசியல் வாதிகளை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என ஸ்ரீலங்கா...
தலைவர் ஆரம்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்றுடன் முறிந்த நிலையில் இனி சுயலாவ அரசியல் வாதிகளை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சியை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து விட்ட நிலையில் புதிய கூட்டணி உருவாக்கி சிலர் நாங்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
தலைவர் உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவடைந்த நிலையில் மக்கள் முன் பிரச்சாரம் செய்பவர்கள் தமது சுயலாப அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு வருபவர்களின் வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு கிழக்கில் கை சின்னத்தில் தனித்த போட்டியிடுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வரலாற்று ஆதரவை வழங்கி அதி கூடிய வாக்குகளை தந்து என்னை பாராளுமன்றம் அனுப்பினார்கள்.
ஆகவே தேர்தல் ஒன்று நடைபெறுமா என பலருக்கும் கேள்வி இருக்கின்ற நிலையில் அவ்வாறு இடம் பெற்றால் இனியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.