தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை...
தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பினார்.
இன்று முற்பகல் அவர் தமது குடும்பத்தினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் அவர் அமெரிக்காவிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவருடன் முன்னாள் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ, மகன் மற்றும் மருமகள் மற்றும் அவரது பேரக்குழந்தையும் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ பூங்காவில் அதன் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அங்கு கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.