தாக்குதல் சூத்திரதாரியை பாதுகாக்கும் வட்டுக்கோட்டை பொலிஸார் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

தாக்குதல் சூத்திரதாரியை பாதுகாக்கும் வட்டுக்கோட்டை பொலிஸார் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

தாக்குதல்   நடத்திய   சூத்திரதாரிகளை   வட்டுக்கோட்டை   போலீசார்   பாதுகாக்கின்றனர்   என   தெரிவித்து   இலங்கை   மனித உரிமைகள்   ஆணைக்குழுவின...

தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை வட்டுக்கோட்டை போலீசார் பாதுகாக்கின்றனர் என தெரிவித்து இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின்  யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பதிவுசெய்யப்பட்டது



சம்பவம் தொடர்பில் தெரிய வருவது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்தகுடும்பப் பெண் ஒருவரும் அவரது மகனின் மனைவியும் கடந்த 2022.06.10 அன்று அராலி மத்தி பகுதியைச் சேர்ந்தஆணொருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.



இந்த தாக்குதலில் குறித்த குடும்பப் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்இந்த தாக்குதலில் அவரது கையில் சத்திரசிகிச்சைமேற்கொள்ளப்பட்டிருந்தது.


இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுஇது இவ்வாறுஇருக்கையில் வட்டுக்கோட்டை பொலிஸார்தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுமுறைப்பாட்டினை வாபஸ் வாங்குமாறும்இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்றும் குடைச்சல் கொடுத்துவந்துள்ளனர்ஆனால் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டை வாபஸ் வாங்கவில்லை.


தாக்குதலை மேற்கொண்ட நபர் வவுனியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில் சில நேரம் அராலி மத்தி பகுதிக்குவந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்அவர் வரும் வேளைகளில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்குபாதிக்கப்பட்ட தரப்பினர் இரகசிய தகவல்களை பலமுறை வழங்கினர்ஆனால் பொலிஸார் சூத்திரதாரியை கைதுசெய்வதில் ஆர்வம் காட்டவில்லை.


இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில்,


என் மீது தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ளதாகவும்என்னை விசாரணைக்கு வருமாறும் வட்டுக்கோட்டைபொலிஸார் அழைத்தனர்



அதனடிப்படையில் நான் காலை 10 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன்அங்கு என்னை தாக்கியவர்நின்றிருந்தார்அங்கே அவருக்கு உயர்ந்தபட்ச மரியாதை வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.


விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுவிசாரணையின்போது பொலிஸார் "இந்த பெண்ணை தாக்கி அவரைபடுகாயமடைய செய்தீர்களா நீங்கள்என அவரிடம் வினவினர்அவர் அதற்கு "இவரை எனக்கு தெரியாதுஇதற்குமுன்னர் நான் பார்த்திருக்கவில்லைஇவ்வாறு இருக்கையில் நான் எப்படி தாக்குதல் நடாத்துவது?" என கூறினார்அதற்கு பொலிஸார் எதுவும் கூறவில்லை.


இறுதியில்இந்த பிரச்சினையை நீதிமன்றத்திற்கு விடுமாறு நான் கூறினேன்அதற்கு பொலிஸார் "எங்களது வேலைஎங்களுக்கு தெரியும்இந்த பிரச்சினையை எங்கே விட வேண்டும் என நீங்கள் எங்களுக்கு கூற தேவையில்லைஎனகூறினர்.


பின்னர் இந்த பிரச்சினையை இணக்க சபைக்கு விடுவதாக பொலிஸார் கூறினர்அதற்கு நான் எனது எதிர்ப்பை காட்டி"இந்த பிரச்சினை இணக்க சபைக்குரிய பிரச்சினை இல்லை எனவே நீதிமன்றத்திற்கு விடுங்கள்என கூறினேன்அதற்கு அவர்கள் "நீதிமன்றத்திற்கு விட்டாலும் அங்கு குற்றப்பணம்தான் தீர்ப்பார்கள்நாங்கள் அந்த குற்றப்பணத்தைஇங்கேயே வாங்கி தருகின்றோம்என கூறினர்.


அதற்கு நான் "பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நான் சந்திக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை அவர்விசாரணை செய்ய வேண்டும்என்று கூறினேன்அதற்கு அவர்கள் "அவருடன் கதைப்பதற்கு உங்களுக்கு அனுமதிவழங்க முடியாதுஎனக்கூறி இணக்க சபைக்கு இந்த பிரச்சினையை விடுவதாக கூறி மிரட்டி என்னிடம் கையொப்பம்வாங்கினர்பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள்அவர்கள் இலஞ்சம் பெறுகின்றனராஎன்ற ஐயத்தை எனக்குஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பொலிஸாரிடம் நீதி கிடைக்கு என்று எதிர்பார்த்திருந்த எனக்கு அங்கு பயமுறுத்தலும் அவமானமுமேகிடைத்ததுஆகையால் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பிராந்திய அலுவலகத்தில் நானும் எனது மகனும் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம் என்றார்.


அண்மைக் காலமாக வட்டுக்கோட்டை பொலிஸாரின் நீதித்தன்மை இல்லாத அடாவடியான செயற்பாடுகள் குறித்துமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்அத்துடன் கடந்த வாரமும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3318,lanka,8610,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தாக்குதல் சூத்திரதாரியை பாதுகாக்கும் வட்டுக்கோட்டை பொலிஸார் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...
தாக்குதல் சூத்திரதாரியை பாதுகாக்கும் வட்டுக்கோட்டை பொலிஸார் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBI62Thgc4wT2N9QhzW1hsvCB0KRRKBzFo4gBn-3L4qpBDNh6taYe6Zq9O0s0hH-_SyylOeQNAQEsqgAG5oRMVbQoda3sZq4AgbKVn0MmMt8CTy-5a4Q7P6jnQ7BnA4qLjJsqcy5V7ZsJljv0K9uOgtXqnQU6zkdwxEkyB7NvaW1YBLGG9PPTXgmQr/w480-h640/D45F2672-BDDD-491F-9F61-542656BB9073.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBI62Thgc4wT2N9QhzW1hsvCB0KRRKBzFo4gBn-3L4qpBDNh6taYe6Zq9O0s0hH-_SyylOeQNAQEsqgAG5oRMVbQoda3sZq4AgbKVn0MmMt8CTy-5a4Q7P6jnQ7BnA4qLjJsqcy5V7ZsJljv0K9uOgtXqnQU6zkdwxEkyB7NvaW1YBLGG9PPTXgmQr/s72-w480-c-h640/D45F2672-BDDD-491F-9F61-542656BB9073.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2023/01/blog-post_839.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/01/blog-post_839.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content