உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆண...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம், ஜனவரி மாதம் 20ம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
340 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று (ஜன.04) மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, இடம், பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் எனவும் எனவும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.