கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொடவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டுபாயில் இருந்து நாடு திரும்...
கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொடவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொட இன்று (06) காலை கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.