யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன பத்திரத்தை இன்று (23) பிர...
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன பத்திரத்தை இன்று (23) பிரதமர் தினேஷ் குணவர்த்தன உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார்.
அதேவேளை, கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களையும் கொள்கையையும் புரிந்து கொண்டு, அதனை வலுப்படுத்தும் வகையில் செயற்படக் கூடிய பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படும் வரையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கான பதில் தலைவராகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை செயற்படுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.