யாழ்.நல்லூர் அரசடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு...
யாழ்.நல்லூர் அரசடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் அரசடி பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு வழிமறித்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது மற்றும் 21 வயதான இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுக்கு இடையேயான மதுபான விருந்தின்போது ஏற்பட்ட முரண்பாடு இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.