வவுனியாவில் சீனிப்பானியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரிடமிருந்து சுகாதார பிரிவினர் 41லீற்றர் சீனிப்பானியை கைப்பற்றியுள்ளனர். தேன் என ...
வவுனியாவில் சீனிப்பானியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரிடமிருந்து சுகாதார பிரிவினர் 41லீற்றர் சீனிப்பானியை கைப்பற்றியுள்ளனர்.
தேன் என சீனிப்பானியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் காத்தார் கோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றினை சுற்றிவளைத்தனர்.
இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 55 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பானியினை சுகாதார பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.
சந்தேகநபர் நெளுக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 55 போத்தல்களில் அடைக்கப்பட்ட 41லீற்றர் சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தபடுத்தப்பட்டது.
சந்தேகநபரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.