யாழ்,அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்பட...
யாழ்,அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,போரினால் தாய் தந்தையரை இழந்த,முல்லைத்தீவு,மன்னார்,கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா நாற்பதினாயிரம் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்குறித்த மடத்தில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய நிலை
எழுபது பிள்ளைகளுக்கும் உலர் உணவுப் பொருட்களை,பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார நிவாரண உதவிப் பணியாக,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும்,சமூக சேவையாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ்.மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் சமூக சேவையாளர் சாம்பசிவம் தவசங்கரி ஆகியோர் வழங்கி வைத்தனர்.நிகழ்வுகள் யாவும் இல்ல பொறுப்பதிகாரி அருட் சகோதரி மேரி ஜெயமலர் தலைமையில் நடைபெற்றது.