யாழ்ப்பாண புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வருகை தராமைக்கான விளக்கம் ...
யாழ்ப்பாண புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வருகை தராமைக்கான விளக்கம் கேட்கும் கடிதம் பாடசாலை நிர்வாகத்தினரால் கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பினை கண்டித்து பல தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.அதன்படி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், தபால், துறைமுகம் மற்றும் வங்கி உட்பட பல துறைகள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்ற ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை. அவ்வாறு பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களிடம்
பாடசாலைக்கு வருகை தராமைக்கான விளக்கம் கேட்கும் கடிதம் பாடசாலை நிர்வாகத்தினரால் கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.