உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களம், நிதி அ...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (மார்ச்.03) இடம்பெற்ற இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.