அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீடொன்றிற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள...
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீடொன்றிற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மத்தியில், சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தி மகேந்திரனும் அடங்குகின்றமை டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் புலஸ்தி மகேந்திரனும் உயிரிழந்துள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
புலஸ்தி மகேந்திரனின் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ மாதிரிகளின் ஊடாக, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.