பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், தேடப்படும் குற்றவாளியுமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நடுன் சிந்தக்க மற்றும் “குடு சலிந்து” என அழைக்கப்பட...
பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், தேடப்படும் குற்றவாளியுமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நடுன் சிந்தக்க மற்றும் “குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா ஆகியோர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றாப் புலனாய்வு குழுவினால் சந்தேகநாபர்கள் இன்று காலை மடகாஸ்கரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த சில தினங்களுக்கு முன்ப, மடகஸ்கருக்குச் சென்றிருந்ததுடன், அவர்கள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
“ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் அந்த குழுவில் உள்ளதுடன், நந்துன் சிந்தகவின் மனைவி என கூறப்படும் வெளிநாட்டு பெண்ணும் அந்த குழுவை அங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகநபர்கள் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், இது தொடர்பில் மடகஸ்கர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.