34 கிலோகிராம் நிறையுடைய 60,460 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த...
34 கிலோகிராம் நிறையுடைய 60,460 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து வருகைதந்த திகன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு மாற்றாக பயன்படுத்தும் போதை மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.