பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் சங்கானையில் போராட்டமொன்று இடம்பெற்றது. தமிழர்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் சங்கானையில் போராட்டமொன்று இடம்பெற்றது.
தமிழர் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
சங்கானை பொதுச்சந்தை முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னாள் தவிசாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன்போது வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து , கச்சதீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, இராணுவமே வெளியேறு, கடற்படையே வெளியேறு போன்ற கோஷங்கள் போராட்டகாரர்களால் எழுப்பப்பட்டன.