அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கான அவர் கைது செய்யப்ப...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கான அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கும், தனக்கும் இடையில் 2006ம் ஆண்டில் தொடர்பு இருந்ததாக அபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்; குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் மறுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் டொனால்ட் டிரம்ப்பின் சட்டத்தரணி, அபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸிற்கு 1,30,000 அமெரிக்க டொலரை வழங்கி, சமரசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் பண கொடுப்பனவானது, ஹஷ் மணி என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான கொடுக்கல் வாங்கல் சட்டத்திற்கு முரணானது அல்ல என கூறப்படுகின்றது.
ஆனால் சிக்கல் எங்கே ஆரம்பித்தது என்றால், ஸ்டார்மி டேனியல்ஸ{க்கு வழங்கப்பட்ட பணம் குறித்து, ட்ரம்ப்பின் சட்டத்தரணி மைக்கேல் கோச்சனின் ’செலவுகளுக்கான பணத்தை திருப்பி செலுத்துதல் கணக்கில்’ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சட்டக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதாகக் கூறி தனது வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அப்போது தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் இந்த விவகாரங்கள் நடைபெற்றுள்ளன. எனவே தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய பண பரிமாற்றத்தில் விதிகள் மீறப்பட்டதாகவும் இந்த விவகாரம் கையாளப்படலாம்.
ஸ்டோர்மி டேனியல்ஸ் யார்?
ஸ்டோர்மி டேனியல்ஸின் இயற் பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 2006ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் ட்ரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.
கலிபோர்னியா – நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை ட்ரம்பின் சட்டத்தரணி திட்டவட்டமாக மறுத்தார்.
தனது குற்றச்சாட்டுகள் குறித்து மௌனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட போது, “இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்” என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.
ட்ரம்ப் – ஸ்டோர்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா?
தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.
என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், ஜனாதிபதியாக பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.
1920இல் ஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.
எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், ஜனாதிபதித்; தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும்.