உதயன் பத்திரிகை மீதான வன்மம் ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் மத அமைப்பொன்றை சேர்ந்த போதகர் தலைமையில...
உதயன் பத்திரிகை மீதான வன்மம் ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்!
ஜனநாயகத்தின் நான்காவது துணாகக் கருதப்படும் ஊடகத்தை அச்சுறுத்திப் பணியவைக்கலாம், வன்முறை வழியில் கட்டுப்படுத்தலாம் என யாராவது எண்ணினால் அது சாத்தியமற்றதாகும்.
எனினும் இவ்வாறான கும்பல்களில் ஜனநாயக விரோத சம்பவங்களை, ஜனாநாயகத்திற்கான போராடும் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்களை சாதாரணமாகக் கடந்து விட முடியாது. இவ்வாறான ஜனநாயக விரோத கும்பல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. அத்துடன், தண்டிக்கப்பட வேண்டியவை.
உதயன் பத்திரிகை மீதான இந்த சிறு கும்பலின் இந்த அடாவடியை யாழ்.ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதன் ஊடாக இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுக்கிறது.
யாழ்.ஊடக அமையம்
இராசாவின் தோட்டம் வீதி,
யாழ்ப்பாணம்