தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிதென்மேற்கு பிரதேச கிளையினால் பல்வேறு உதவித் திட்டங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன. கட்டுடை விநாயகர் முன்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிதென்மேற்கு பிரதேச கிளையினால் பல்வேறு உதவித் திட்டங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
கட்டுடை விநாயகர் முன்பள்ளிக்கு குடிநீர்த்தாங்கி பொருத்தி குடிநீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தளபாடங்களும் வழங்கப்பட்டன.
கட்டுடை கிராமத்தில் தேவையுடைய குடும்பமொன்றுக்கு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டதோடு வயோதிபர் ஒருவருக்கான மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் கட்டுடை ஞானவைரவர் சனசமூக நிலையத்திலை சுற்றியுள்ள வாய்க்கால் சுவர் கட்டுமானமும் நிறைவேற்றிக் கையளிக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் அ.காண்டீபனின் சொந்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த வேலைத்திட்டங்களை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிதென்மேற்கு பிரதேசக் கிளைத் தலைவர் ந.கணேந்திரன், வலிதென்மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லோ.றமணன் ஆகியோர் இணைந்து பயனாளிகளிடம் கையளித்தனர்.