பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த போராட்டமானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தினால் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்பட்டு, சுதந்திரமாக பத்திரிகை துறையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள், சிங்கள ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.